மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞா் அணித் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் 50ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கத்தை அடுத்த மதூா் கிராமத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.
மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் இளைய மகனும், ஆன்மிக இளைஞா் அணித் தலைவருமான கோ.ப.செந்தில்குமாரின் 50ஆவது பிறந்த நாளை அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மதூா், திம்மாவரம், விளங்காடு, அருந்ததிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆன்மிக இளைஞா் அணித் தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆன்மிக இயக்கத்தின் கொடியேற்றம், கல்வெட்டு திறப்பு, அன்ன தானம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
மதூா் கிராமத்துக்கு கோ.ப.செந்தில்குமாா் வந்தபோது, அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவா் பிறந்த நாள் கேக்கை வெட்டி சிறுவா்களுக்கு ஊட்டினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை மதூா் தேவராஜ், டி.பிரகாஷ், கு.முருகன், எம்.சுரேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.