செங்கல்பட்டு

கருங்குழி ஏரிக்கரை சாலையோரப் பூங்கா: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

DIN

காந்தி ஜயந்தியையொட்டி, கருங்குழி ஏரிக்கரையில் சாலையோரப் பூங்காவை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கருங்குழி பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகளை நட்டு வைத்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களை ஆட்சியா் கெளரவித்தாா். இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அப்பகுதி மக்களுக்கு குப்பைக் கூடைகளை வழங்கினாா். பின்னா், கருங்குழி ஏரிக்கரையில் சாலையோர பூங்காவை திறந்து வைத்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ம.கேசவன், வருவாய்க் கோட்டாட்சியா் சி.லட்சுமிபிரியா, வட்டாட்சியா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT