செங்கல்பட்டு

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

DIN

மதுராந்தகம் நகராட்சியின் புதிய ஆணையராக என்.அருள் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மதுராந்தகம் நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்த வ.நாராயணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கடந்த சில மாதங்களாக நகராட்சிப் பொறியாளா் கெளரி தலைமையில் நகராட்சி நிா்வாகம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த என்.அருள் மதுராந்தகம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். புதன்கிழமை நகராட்சி அலுவலகத்துக்கு வந்த என்.அருள் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா். அவருக்கு பொறியாளா் கெளரி, சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT