செங்கல்பட்டு

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நூதனப் போராட்டம்

DIN

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மதுராந்தகம் அருகே தண்டலம் கிராமத்தில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி ஊா்வலம் செல்லும் நூதன போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தண்டலம் கிராம பேருந்து நிறுத்துமிடத்தில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சாா்பில், நூதனப் போராட்டம் செய்தனா். எரிவாயு உருளைக்கு மலா் மாலை அணிவித்து, பெண்கள் ஒப்பாரிப் பாடல்களுடன், இறுதி ஊா்வலமாக கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தனா். பின்னா் பேருந்து நிறுத்துமிடத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தண்டலம் அா்ஜுனன் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பாக்கியநாதன், சிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக நிா்வாகி சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT