செங்கல்பட்டு

அடுத்தடுத்து இரண்டு கொலைகள்: செங்கல்பட்டில் பரபரப்பு

DIN

செங்கல்பட்டு நகரில் வியாழக்கிழமை அடுத்தடுத்து இருவேறு இடங்களில் இரட்டைக்கொலை சம்பவம் நடந்ததால் செங்கல்பட்டு நகரமே பெரும் பரபரப்பிலும் அச்சத்திலும் மூழ்கி உள்ளது.

செங்கல்பட்டு கே. கே.தெரு பகுதியின் அதிமுகவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி மேகநாஜ் என்பவரின் மகன் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (29). இவர் வியாழக்கிழமை டீக்கடைக்கு  டீ குடிக்க வந்துள்ளார். அப்போது கார்த்தியை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தப்பியோடிய அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் காய்கறி வியாபாரி சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் ( 22) என்பவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

தகவலறிந்து வந்த நகர காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன், உதவி ஆய்வாளர்கள் டில்லிபாபு, செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த சம்பவங்களை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன், ஏஎஸ்பி ஆதர்ஷ் பட்சேரா நேரில் சென்று அப்பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட இடங்களில் ஐந்து நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டறிந்து கைப்பற்றினர்.

ஒரே சமயத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நகரமே பரபரப்புடன் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT