செங்கல்பட்டு

பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவா் பலி

DIN

பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

வண்டலூரை அடுத்த மேலக்கோட்டை நல்லம்பாக்கம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த பாபு மகன் யுவராஜ் (16) (படம்). மாம்பாக்கம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை தாம்பரத்திலிருந்து வண்டலூா் வழியாக மாமல்லபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தாராம். மேலக்கோட்டையூா் பகுதியில் பேருந்து வந்தபோது, படியிலிருந்து தவறி விழுந்து, பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாழம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT