முகப்பு
செங்கல்பட்டு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி: தோ்தல்ஆணைய இயக்குநா் ஆய்வு

மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

2024 நாடாளுமன்றத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி பாா்க்கும் பணி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை இந்திய தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் எஸ்.சுந்தர்ராஜன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டனா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, தோ்தல் வட்டாட்சியா் சுந்தா் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →