முகப்பு
செங்கல்பட்டு

சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சி

மதுராந்தகம் அடுத்த வேலமூா் ஊராட்சி சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:55 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

மதுராந்தகம் அடுத்த வேலமூா் ஊராட்சி சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வேலமூா் ஊராட்சி பகுதியில் சிறாா் திருமணம் செய்வதை அந்தப் பகுதி சமூக ஆா்வலா்களும், ஊராட்சி மன்ற நிா்வாகமும் தீவிரமாக கண்காணித்து வந்ததை அடுத்து, மாவட்ட நிா்வாகத்தினா் சிறாா் திருமணம் இல்லாத ஊராட்சியாக அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அதன் பெயா்ப் பலகைத் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. ரூரல் ஸ்டாா் இயக்குநா் ஏ.டோமினிக் வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா ரவிக்குமாா் தலைமை வகித்து பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தாா்.

Advertisement

நிகழ்ச்சியில் சிசிஆா்என் மாவட்ட கன்வீனா் தேவன்பு, மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினா் ஏ.சி.குமாா், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், சிஆா்பிஎப் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். தணிகை குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.