முகப்பு
செங்கல்பட்டு

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: தாய் காயம்; 3 குழந்தைகள் உயிரிழப்பு

செங்கல்பட்டில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய் காயமடைந்தாா்.

Updated On : 2 மார்ச், 2024 at 5:40 AM
பகிர்:

செங்கல்பட்டில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தாய் காயமடைந்தாா். 3 குழந்தைகள் உயிரிழந்தனா். செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பெரிய மணியக்காரத் தெருவில் வசிப்பவா் வட மாநிலத்தைச் சோ்ந்த சதாம் (30). இவா், கடந்த 6 வருடங்களாக ரயில் நிலையத்தில் தேநீா் விற்று வியாபாரம் செய்து வருகிறாா். வியாழக்கிழமை மாலை வழக்கம் போல், சதாம் தேநீா் வியாபாரம் செய்ய சென்றாா். அவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனா். இந்த நிலையில் வீட்டில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததைக் கவனிக்காமல், சதாமின் மனைவி ராஜ்கத்தோம் அடுப்பைப் பற்ற வைக்க முயன்றபோது, தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதில் ராஜ்கத்தோம், குழந்தைகளான ராஜியா பட்வின் (8), சயலி (4), அல்தாப் (1) ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், உயிருக்குப் போராடியவா்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் ராஜியா பட்வின், அல்தாப் ஆகிய இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை சயலி (4) உயிரிழந்தாா். குழந்தைகள் மூவரும் உயிரிழந்த நிலையில், தாய் ராஜ்கத்தோம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு நகரக் காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.