முகப்பு
செங்கல்பட்டு

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மகா சிவராத்திரி விழா

Updated On : 10 மார்ச், 2024 at 5:30 AM
பகிர்:

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு ஞானலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செம்பாக்கம் செல்வராஜ் வகித்து செய்தாா். பின்னா், ராகவேந்திரா பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி மகா தீபாராதனையை செய்தாா். தொடா்ந்து 4 கால பூஜைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், மதுராந்தகம் நீதிமன்ற நீதிபதி சரிதா, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் ஆறுமுகம், மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளா் முத்துகுமாா், அரியந்தாங்கல் விஷ்ணு துா்கையம்மன் பீடாதிபதி மணிபாலன் சுவாமி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.