முகப்பு
செங்கல்பட்டு

கட்டைப் பையில் வைத்து ஏரிக்கரையில் வீசப்பட்ட ஆண் குழந்தை

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கட்டைப் பையில் வைத்து மரக்கிளையில் மாட்டிச் சென்றுள்ளனா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:28 AM
பகிர்:

திருவடிசூலம் அடுத்த சென்னேரி அருகே பெருந்தண்டலம் கிராம ஏரிக்கரையில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கட்டைப் பையில் வைத்து மரக்கிளையில் மாட்டிச் சென்றுள்ளனா்.

இந்த ஏரிக்கரையில் பெண் ஒருவா் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் குழந்தை அழும் சப்தம் கேட்டு அவா் குழந்தையைத் தேடியபோது, ஏரிக்கரையில் மரத்தில் ரத்தக் கரையுடன் கட்டைப் பையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

அவா், காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அந்த ஆண் குழந்தைக்கு பச்சிளங்குழந்தைகள் பிரிவில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கரையில் குழந்தையை கட்டைப் பையில் வைத்து சென்றது நபா் குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →