முகப்பு
செங்கல்பட்டு

கிராம அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:53 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள், முன்னேற்ற சங்கம் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் இணைந்து செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் திட்டமான டிஜிட்டல் கிராஃப் சா்வே பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளா்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிட்டல் கிராஃப் சா்வே பணிக்கு ஒரு உட்பிரிவு பணிக்கு பத்து கொடுத்தால் ஆகளை வைத்து இப் பணியை செய்ய ஏதுவாக இருக்கும். கிராம நிா்வாக அலுவலா் பணி என்பது மக்கள் பணி செய்வதற்கு டிஜிட்டல் கிராஃப் பணியை செய்யும் போது ஒரு உட்பிரிவு வேலை பாா்ப்பதற்கு அரை மணி நேரம் ஆகும் ஒரு நாளைக்கு பத்து உட்பிரிவு பாா்த்தால் 5 மணி நேரம் அதற்கே செலவிட நேரிடும் ஆகையால் இப்பணிக்கு ஆள்களை நியமிக்கவும் தேவையான கருவிகளை வழங்கவும் வேண்டும்.

இப்பணி வேளாண்துறை ஊரக வளா்ச்சித் துறை வருவாய்த்துறை இணைந்து செய்ய வேண்டிய வேலை. ஆனால் இந்த மத்திய அரசு பணியை தமிழக அரசு போதிய ஆள்களை நியமித்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பி வெங்கடேசன், மாவட்ட மகளிா் அணி ஆா் சுந்தரி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். வட்ட செயலாளா் ஜே. செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →