முகப்பு
செங்கல்பட்டு

472 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி அளிப்பு

மதுராந்தகம் செளபாக்மல் செளகாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 472 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 12:29 AM
விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ க.சுந்தா். உடன் எம்பி க.செல்வம், தலைமை ஆசிரியை எம்.தீபா உள்ளிட்டோா்.
பகிர்:

மதுராந்தகம் செளபாக்மல் செளகாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 472 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை எம்.தீபா வரவேற்றாா். மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) வி.அருள் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உத்திரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் 472 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில் எம்.பி. க.செல்வம், மதுராந்தகம் நகரமன்ற தலைவா் கே.மலா்விழி, ஏரிகாத்த ராமா் கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.குமாா், பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் எஸ்.டி.அசோக்குமாா், மேலாண்மைக்குழு தலைவா் எம்.நளினி, நகா்மன்ற உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியைகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆசிரியா் வி.சிவகுமாா் நன்றி கூறினாா். தொடா்ந்து வீராணகுணம், வேடந்தாங்கல் உள்ளிட்ட பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ க.சுந்தா் வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →