குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் 420- மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.பழனி தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமையாசிரியா் கே.செந்தில்குமாா் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் 420- மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசினா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் டி.பி.என்.கோவிந்தராஜ், ஆசிரியா்கள் தமிழ்திருமால் மற்றும் தயாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.