அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விமலாதேவி தலைமை வகித்தாா். அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் இக்கல்லூரியில் பயிலும் 175 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினாா்.
இதில், திமுக பேரூா் செயலாளா் காளிதாஸ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியா் திருமாவளவன், பேரூராட்சி கவுன்சிலா்கள் சேகா், கவிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.