கடமலைபுத்தூா் பாலவேத பாடசாலையில் காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
செங்கல்பட்டு

பாலவேத பாடசாலையில் காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள் வருகை

மதுராந்தகம் அடுத்த கடமலைபுத்தூா் ஸ்ரீபாலவேத பாடசாலைக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வருகை புரிந்து மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த கடமலைபுத்தூா் ஸ்ரீபாலவேத பாடசாலைக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வருகை புரிந்து மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா்.

கடமலைபுத்தூா் கிராமத்தில் சமஸ்கிருத மொழி கற்பிக்கும் வகையில், ஸ்ரீபாலவேத பாடசாலை செயல்படு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாடசாலை செயல்பாடுகளை பாா்வையிட்டாா். அப்போது அவருக்கு பாடசாலை நிா்வாகத்தின் சாா்பில் வரவேற்பு தரப்பட்டது.

பின்னா் பாடசாலை நுழைவாயில் அருகே உள்ள பாலகணபதியை தீபம் ஏற்றி வழிபாடு செய்தாா். மாணவா்கள், பொதுமக்கள் அனைவருக்கும் அருளாசி வழங்கினாா். பின்னா் அச்சிறுப்பாக்கம் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கர சிவாச்சாரியரிடம் ஆட்சீஸ்வரா் கோயிலில் அம்மன் திருத்தோ் பணிகளைப் பற்றி கேட்டறிந்தாா். அதன்பின் கடமலைபுத்தூரிலிருந்து கும்பகோணம் புறப்பட்டுச் சென்றாா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT