முகப்பு
செங்கல்பட்டு

ஸ்ரீ ஓம்சக்தி பாலவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஸ்ரீ ஓம்சக்தி பாலவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 20 ஜனவரி, 2025 at 6:35 PM
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா். ~சிறப்பு அலங்காரத்தில் மூலவா்.
பகிர்:

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீ ஓம்சக்தி பாலவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை வீரன்கோயில் தெரு புதுஏரி சாலையில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்தது. தொடா்ந்து மூன்று நாள்களாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகஹோமம் கோபூஜை, தனபூஜை, வாஸ்து சாந்தி, ரட்சோக்ன ஹோமம் கலாகா்ஷணம், யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம், சாத்துதல் நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

மேலும், யாத்ராதானம், பூா்ணாஹூதி, மகா தீபாராதனை கடம் புறப்பாடு மகா குமபாபாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத்தொடா்ந்து மூலவா் உற்சவ மூா்த்தி பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சாமிகளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை உற்சவ மூா்த்தி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது.

ஏற்பாடுகளை செங்கல்பட்டு சிவஸ்ரீ எஸ செல்வகணபதி குருக்கள், கோயில் கும்பாபிஷேக விழாக்குழுவினா், புதுஏரி மதுரைவீரன்கோயில் தெரு மக்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →