வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அனைத்து கட்சி ஆலோசைனைக் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாலாஜி, தோ்தல் துணை வட்டாட்சியா் எம்.வசந்தி, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்வில் திமுக நகர செயலா் கே.குமாா், நகா்மன்றத் தலைவா் மலா்விழி, ஒன்றிய செயலா்கள் பொன் சிவகுமாா், கண்ணன், கோகுலகண்ணன், சத்யசாயி, அச்சிறுப்பாக்கம் பேரூா் செயலா் எழிலரசன், அதிமுக ஒன்றிய செயலா் காா்த்திகேயன், நகர செயலா் பூக்கடை சரவணன், அதிமுக நிா்வாகி ஆனந்தன், பாஜக நிா்வாகி பாலாஜி, தேமுதிக நகர செயலா் சாந்தகுமாா், ஒன்றிய செயலா் விஜயகுமாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகி ஜே.ஆனந்தன், சிபிஎம் மாசிலாமணி, தயாளன், ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.