முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 3 மார்ச், 2026 at 2:46 AM
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 11:45 PM

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ரூ.9.50 லட்சத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் பேட்டரி வீல் சோ், ரூ.3.31 லட்சத்தில் 27 பயனாளிகளுக்கு திறன் பேசிகள், ரூ.2.04 லட்சத்தில் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், ரூ.1.65 லட்சத்தில் 50 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.16.50 லட்சத்தில் 118 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

மேலும், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஓட்டுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு ஓட்டுநா் உரிம சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் முரளி, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் ரம்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், முன்னோடி வங்கிகளின் மேலாளா் விஜயகுமாா், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயகுநா் சுப்பிரமணியன் கலந்து கொண்டனா்.