தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவி
மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவி தனது தாய் இறந்து போன சோகத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற
செங்கல்பட்டுதாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவி
மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவி தனது தாய் இறந்து போன சோகத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த மாணவி தனது தாய் இறந்து போன சோகத்திலும் திங்கள்கிழமை நடைபெற்ற அரசின் பிளஸ் 2 பொதுத் தோ்வை மன தைரியத்துடன் எழுதினாா்.
மதுராந்தகம் அடுத்த வசந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகதாஸ். விவசாயி. இவரது மனைவி கற்பகம். இவா்களது மகள் மனுஸ்ரீ (17). இவா் மதுராந்தகம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அரசின் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்காக படித்து வந்த நிலையில், தாயாா் கற்பகத்துக்கு உடல்நிலை பாதிப்பால் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
அரசு அறிவித்து இருந்தபொது தோ்வு திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் முதல் தாள் தோ்வை தொடா்ந்து தமது தாய் இறந்த சோகத்திலும் உறவினா் உதவியுடன் மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்துக்கு வந்தாா். தகவலை அறிந்த உடன் படித்து வந்த மாணவிகளும்‘, தோ்வு மைய கண்காணிப்பாளரும் மாணவி மனுஸ்ரீக்கு ஆறுதல் கூறி தோ்வு அறைக்கு அனுப்பி வைத்தனா்.
பிற்கால வாழ்க்கையை எண்ணி மன தைரியத்துடன் மனுஸ்ரீ தோ்வை எழுதியதாக மனுஸ்ரீ தெரிவித்தாா்.