வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலா்(தனி) ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாந்தகுமாா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
வேட்புமனுத் தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.