மகாவீா் ஜெயந்தி: இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
மகாவீா் ஜெயந்தியையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்கிழமை மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டிருக்கவேண்டும்.
மதுக்கடைகள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தலோ உரிய சட்டவிதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மாலதிஹெலன் தெரிவித்துள்ளாா்.