சென்னை

இதய மாற்று சிகிச்சை செய்த 9 வயதுச் சிறுமி மரணம்

சென்னை, செப். 13: ஓர் ஆண்டுக்கு முன்பு 15 வயதுச் சிறுவன் ஹிதேந்திரன் இதயம் மூலம் இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்ட 9 வயதுச் சிறுமி அபிராமி ஞாயிற்றுக்கிழமை இரவு மரணம் அடைந்தார்.   பெங்களூரைச் சேர்ந்த தமி

தினமணி

சென்னை, செப். 13: ஓர் ஆண்டுக்கு முன்பு 15 வயதுச் சிறுவன் ஹிதேந்திரன் இதயம் மூலம் இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்ட 9 வயதுச் சிறுமி அபிராமி ஞாயிற்றுக்கிழமை இரவு மரணம் அடைந்தார்.

  பெங்களூரைச் சேர்ந்த தமிழகச் சிறுமி அபிராமி கடந்த சில ஆண்டுகளாகவே இதய தசை வலுவிழப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவமனைத் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஸ் மணவாளன் தெரிவித்தார்.

  சாலை விபத்தில் மூளைச் சாவுக்குள்ளான திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் இதயத்தை தேனாம்பேட்டை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி 11 நிமிடத்தில் முகப்பேர் டாக்டர் கே.எம்.செரியன் இதய மருத்துவமனைக்கு போலீஸôர் கொண்டு வந்து உதவினர்.

  சிறுவனின் இதயத்தை உடனடியாக சிறுமி அபிராமிக்கு டாக்டர் கே.எம்.செரியன் மருத்துவமனை டாக்டர்கள் பொருத்தினர். இதய மாற்று சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் உடல் நிலை நன்றாக இருந்தது.

சிறுமியின் கண்கள் தானம்: தொடர்ந்து சிறுமியை டாக்டர்களிடம் காண்பிக்க வசதியாக ராயபுரத்தில் அவரது பெற்றோர் தங்கினர்.

  இதனிடையில் சிறுமி அபிராமிக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கே.எம்.செரியன் இதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அபிராமி ஞாயிற்றுக்கிழமை இறந்து விட்டார். அபிராமியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டன.

  மகன் ஹிதேந்திரனின் இதயம் உள்பட உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன் வந்த செயலுக்காக அண்மையில் சுதந்திர தினத்தன்று அவரது தாய் டாக்டர் புஷ்பாஞ்சலிக்கு கல்பனா சாவ்லா விருதை முதல்வர் கருணாநிதி வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT