சென்னை

பி.இ. சேர்க்கை: 1.22 லட்சம் பேர் பதிவு

DIN

பி.இ. விண்ணப்பப் பதிவுக்கு இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை வரை 1.22 லட்சம் பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. வரும் ஜூன் 27 -ஆம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளது.
மே 31 கடைசி: இதற்கான ஆன்-லைன் பதிவு மே 1 -ஆம் தேதி தொடங்கியது. பதிவு செய்ய வரும் 31 -ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஆன்-லைன் பதிவுக்கு இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், 1,22,309 பேர் பதிவு செய்துள்ளனர்.
ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசி நாளாகும். விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் ஜூன் 20 அன்றும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 -ஆம் தேதியன்றும் வெளியிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT