சென்னை

துணி பார்சலில் போதைப் பாக்கு கடத்தல்: இருவர் கைது

DIN

சென்னை சென்ட்ரலில் இருந்து துணி பார்சலில் போதைப் பாக்கு கடத்த முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை சென்ட்ரல் ரயில்வே பார்சல் அலுவலகத்தில் இருந்து துணி பார்சலில் மறைத்து குட்கா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள், வேனில் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், வால்டாக்ஸ் சாலை திருப்பள்ளித் தெரு பகுதியில் யானைக்கவுனி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு மினி வேனை மறித்து சோதனையிட்டனர். இதில், தடை செய்யப்பட்ட பான், குட்கா தயாரிக்கத் தேவையான ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஜர்தா, சீவல் பாக்கு உள்ளிட்ட பொருள்கள் 10 மூட்டைகளில் வேனில் இருந்தன. அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வேனில் இருந்த எர்ணாவூரைச் சேர்ந்த ப. ஆகாஷ் திவாரி(22), வேன் ஓட்டுநர் பி.பப்புகுமார் (28) இருவரையும் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில், அந்த மூலப் பொருள்களை வட மாநிலங்களில் இருந்து வாங்கி, அதைத் துணி பார்சல் என ஏமாற்றி ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT