முகப்பு
சென்னை

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: மனு தள்ளுபடி

தனக்கு எதிராக தொடரப்பட்ட அந்நியச் செலாவணி மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி, இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்

Updated On : 10 ஜூலை, 2018 at 4:21 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

தனக்கு எதிராக தொடரப்பட்ட அந்நியச் செலாவணி மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி, இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதுதொடர்பாக அவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2009 -ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன. அந்தப் போட்டிகளின்போது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு முரணாக செலவு செய்ததாக அமலாக்கத் துறை அந்நியச் செலாவணி தொடர்பான வழக்கைப் பதிவு செய்தது. அமலாக்கத் துறை எனக்கு எதிராகப் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.