சென்னை

நீச்சல் குளத்தில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் சாவு: நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டபோது சம்பவம்

DIN

சென்னை மெரீனாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மண்ணடி தம்பு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சபியுல்லா (38). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
சபியுல்லா, தனது மகனையும், மகளையும் செவ்வாய்க்கிழமை காலை மெரீனா கடற்கரையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்துக்கு அழைத்து வந்தார். அங்கு அவர்கள் இருவரும் நீச்சல் பயிற்சி பெற்றனர். 
அப்போது சபியுல்லா, நீச்சல் குளத்தின் இரண்டரை அடி ஆழமுள்ள பகுதியில் குதித்து குளித்துக் கொண்டிருந்த போது குளத்தில் மூழ்கினார். 
இதை சிறிது நேரத்துக்கு பின்னரே, அங்குள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், சபியுல்லாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 
அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், சபியுல்லா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
போலீஸார், சபியுல்லா நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தாரா அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தாரா என விசாரணை செய்கின்றனர். 
இதுதொடர்பாக அந்த நீச்சல் குளத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT