சாலை விபத்தில் கட்டட மேஸ்திரி சாவு
சென்னை அருகே பள்ளிக்கரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கட்டட மேஸ்திரி உயிரிழந்தார்.
சென்னை அருகே பள்ளிக்கரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கட்டட மேஸ்திரி உயிரிழந்தார்.
பள்ளிக்கரணை அருகே உள்ள மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வேலு (42). இவர் கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மோட்டார் சைக்கிளில் கோவிலம்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை நோக்கி வேலு சென்று கொண்டிருந்தார். துரைப்பாக்கம் -குரோம்பேட்டை ரேடியல் சாலையில் பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த வேலு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.