ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?
விமான எரிபொருள் விலை உயர்வால் விமான சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா முடிவு
விமான எரிபொருள் விலை உயர்வால் விமான சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், விமான எரிபொருளின் விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால், இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, தனது சேவைகளில் தினசரி 100 விமானங்களை ஜூன் மாதம் முதல் குறைக்க முடிவு செய்துள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கான விமான சேவைகள் அதிக அளவில் குறைப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இது, தற்போது தினசரி 1,100 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியாவின் சேவைகளில் 10 சதவிகிதமாகும்.
விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் எரிபொருள் பங்கீடு செலவும் மட்டும் சுமார் 40 சதவிகிதமாக இருக்கும்நிலையில், எரிபொருள் மீதான சிறிய விலை உயர்வும் நிறுவனத்தின் லாபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே, பாகிஸ்தான் வான்வெளி மூடல் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் சுற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை எரிபொருள் செலவை மேலும் அதிகரிக்கிறது.
Air India may cut 100 flights daily as jet fuel prices hit
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.