ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி
மேற்கு ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறிய விபத்து பற்றி....
மேற்கு ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் குர்திஷ் நகரமான சனந்தாஜ் அருகே உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே, டேங்கர் லாரி மற்ற கார்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததாக ஐ.ஆர்.என்.ஏ ஊடகம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
லாரியின் பிரேக் பழுதானதே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், சனந்தாஜ் அருகே எரிபொருள் டேங்கர் லாரியும் பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பலியாகினர்.
ஈரானில் ஆண்டுதோறும் ஏற்படும் சாலை மற்றும் போக்குவரத்து விபத்துகளில் 17,000-க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.
A fuel tanker exploded in western Iran, killing 11 people and injuring seven others, state media said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.