உலக ஓசோன் தினத்தையொட்டி, கிரீன்வாய்ஸ் அமைப்பு சார்பில் வேளச்சேரி பகுதியில் 100 மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
இந்த விழாவுக்கு கிரீன்வாய்ஸ் அமைப்பின் நிறுவனர் ராகவன் தலைமை வகித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் நேருகுமார் கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
வேளச்சேரி செல்வா நகரில் உள்ள மாநகராட்சிப் பூங்கா, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மாநகராட்சி உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன், கிரீன்வாய்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.