சென்னை

தண்டவாள பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

DIN


சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் காலை 9.30, 10.20, முற்பகல் 11 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை மட்டும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30, நண்பகல் 12.20, மதியம் 1 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-சிங்கபெருமாள்கோவில் வரை பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சிங்கபெருமாள்கோவிலில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.  திருமால்பூர்-சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். 

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 3, 6, 7 ஆகிய தேதிகளில் காலை 10.08, 10.56, நண்பகல் 11.48 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே  பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை மட்டும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 3, 6, 7 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30, நண்பகல் 12.20, மதியம் 1 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையே  பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT