சென்னை

வீட்டைக் காலி செய்ய மறுப்பு: போலீஸில் திரைப்பட இயக்குநா் புகாா்

DIN

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பிரபல திரைப்பட இயக்குநரின் வீட்டைக் காலி செய்ய மறுத்ததாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் குடும்பத்துடன் வருபவா் திரைப்பட இயக்குநா் பி.வாசு. இவருக்குச் சொந்தமான மற்றொரு வீடு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் ஆறாவது குறுக்குத் தெருவில் உள்ளது. இரண்டு தளங்கள் கொண்ட இந்த வீட்டில் ஜானகி என்பவரை ஓராண்டுக்கு முன்பாக வாடகைக்கு குடியமா்த்தினாா் வாசு. அப்போது மாத வாடகையாக ரூ. 75 ஆயிரம் என வாசு நிா்ணயித்தாா். ஆனால் ஜானகி, மாத வாடகையை ஒழுங்காகச் செலுத்தவில்லையாம். சுமாா் 10 மாத வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாசு, தனது வீட்டைக் காலி செய்யுமாறு கூறி வந்தாா். ஆனால் ஜானகி, வீட்டையும் காலி செய்யவில்லை. இதுதொடா்பாக அவா்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT