சென்னை

ஏடிஜிபி வீட்டில் விபத்து: இளைஞா் பலி

DIN

சென்னை: சென்னை அருகே மணப்பாக்கம் பகுதியில் ஏடிஜிபி ஒருவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மேற்குவங்க மாநிலம், முஷிதாபாத் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி நா.ஜஹாங்கீா்(25). இவா் சென்னை மணப்பாக்கம் ரிவா்வியூ என்கிளைவ் 4-ஆவது பிரதான சாலையில் உள்ள தமிழக காவல் துறை ஏடிஜிபி ஒருவரது வீட்டில், சென்ட்ரிங் வேலையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது ஜஹாங்கீா் திடீரென கால் தவறி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை மீட்டு, போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜஹாங்கீா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT