சென்னை

உணவகத்தில் தீ விபத்து

DIN


சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை மயிலாப்பூர் கதீட்ரல் சாலையில் பிரபல தனியார் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் சமையலறையில்  இருந்த பொருள்கள் புதன்கிழமை காலை திடீரென தீப் பிடித்து எரிந்தன.
 இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள், அலறியடித்து ஓடினர். மேலும், அங்கிருந்த சமையல் எரிவாயு உருளையை, அவர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர். இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த மயிலாப்பூர் தீயணைப்புப் படையினர்,  உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேர போராட்டத்துக்குப் பின்னர், அவர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். இந்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ராயப்பேட்டை போலீஸார் விசாரணை 
நடத்தினர்.  விசாரணையில், சமையலறையில் ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்ததால் சமையல் எண்ணெயில் தீப் பிடித்து, அது அறை முழுவதும் பரவியிருப்பது 
இருப்பது தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT