சென்னை

அத்திவரதர் விழா: சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

DIN

அத்திவரதர் விழாவை யொட்டி, அத்திவரதர்  சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு முத்திரை வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1,000 சிறப்பு உறைகள் அச்சிடப்பட்டுள்ளன. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் திருக்கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை  வெளியே எடுக்கப்பட்டு அத்திவரதர் வஸந்த மண்டபத்தில்  பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நிகழாண்டில் கடந்த 1-ஆம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளித்துவருகிறார். தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அத்திவரதர் விழாவையொட்டி,   அஞ்சல் துறையின் தமிழக வட்டாரம் சார்பில், அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை மற்றும் சிறப்பு முத்திரை சென்னை ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்டது.  இதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை வெளியிட்டார்.   நிகழ்ச்சியில், ஆளுநரின் கூடுதல் தலைமைச்  செயலர் ஆர்.ராஜகோபால், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கே.பணீந்தர்ரெட்டி, தமிழகத் தலைமை அஞ்சல்துறைத் தலைவர் எம்.சம்பத், அஞ்சல் துறைத் தலைவர் (வணிக வளர்ச்சி) சாருகேசி, சென்னை மண்டலத் தலைவர் ஆர்.ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து தமிழக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியது: அஞ்சல்துறை சார்பில்,  முதல்கட்டமாக, 1,000 சிறப்பு அஞ்சல் உறைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு சிறப்பு உறையின் விலை ரூ.50 ஆகும். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால், மேலும் ஒரு லட்சம் சிறப்பு அஞ்சல் உறைகள் அச்சிப்படவுள்ளன. இந்த உறை ஒவ்வொன்றும் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

இதுதவிர, கங்கை புனித நீர் விற்கப்படும். இவை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் உள்ள அஞ்சல் துறை அரங்கில் இடம் பெற்றிருக்கும். இதுதவிர, சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT