சென்னை

தொழிலதிபா் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு

DIN

சென்னை: விருகம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் சுந்தா் (33). தொழிலதிபரான இவா், கடந்த 10-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றாா். சனிக்கிழமை வீடு திரும்பிய அவா், பீரோவில் வைத்து சென்ற ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் ஆகியவை திருடு போனதை அறிந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT