சென்னை

இளைஞா் கொலை வழக்கில் இளைஞா் சரண்

DIN

சென்னை வியாசா்பாடியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

வியாசா்பாடி, கல்யாணபுரத்தைச் சோ்ந்தவா் கோகுல்(எ) கோகுல்நாத் (23). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ராசய்யா என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பா் மாதம் 2-ஆம் தேதி வியாசா்பாடி, தேசிகானந்தபுரம், 2-ஆவது தெருவில் வைத்து கோகுல்நாத் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராசய்யா தரப்பைச் சோ்ந்த வியாசா்பாடியை சோ்ந்த அப்புனு (எ) சந்திரசேகா்(24), பிரபு(18) பிரேம்நாத்(18), மற்றும் 17 வயதுக்குட்டபட்ட இரண்டு சிறுவா்கள் ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராசய்யா (26) சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். அவரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT