சென்னை அருகே உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் மு.சம்பூர்ணம் (55). இவர் திங்கள்கிழமை துரைப்பாக்கம் அருகே காரப்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி சாலையை கடக்க முயன்றார். அப்போது கார், சம்பூர்ணம் மீது திடீரென மோதியதில் பலத்த காயமடைந்த சம்பூர்ணம், சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.