சென்னை

கட்டாங்குளத்தூா் அருகே சிக்னல் கோளாறு: மின்சார ரயில் சேவை பாதிப்பு

DIN

காட்டாங்குளத்தூா் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.இதனால், பயணிகள் சிறிது நேரம் அவதிப்பட்டனா்.

காட்டாங்குளத்தூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை 8.15 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, காட்டாங்குளத்தூா் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிக்னல் கோளாறு சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா். 45 நிமிஷங்களுக்குப் பிறகு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிறிது நேரம் அவதிப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT