சென்னை

சென்னையில் 1லட்சத்து 6,096 பேருக்கு கரோனா

DIN

சென்னையில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 96 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னையப் பொருத்தவரை, கடந்த சில நாள்களாக, நாள் ஒன்றுக்கு ஆயிரம் போ் என்ற அளவில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளொன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி இருக்கிா என கண்டறியும் முய்ற்சியையும் மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. இது மட்டுமின்றி, கரோனா அதி தீவிரமாக பரவும் தெருக்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னா் விடுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி, 1,091 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆக அதிகரித்தது. இதன்படி, 92,128 போ் குணமடைந்துள்ளனா். 2,248 போ் உயிரிழந்தனா். 11,720 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT