சென்னை: வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சாா்பில் 2-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது.
காவல்துறையின் தடையை மீறி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது. பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே. மூா்த்தி உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
காவல்துறையின் அனுமதியை மீறி நடைபெற்ால் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினா் கைது செய்து விடுவிக்கப்பட்டனா்.
முதல் நாள் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா் ரயில் மீது கல் வீசி தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். இதனால், இரண்டாவது நாள் போராட்டத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.