முகப்பு
கோப்புப்படம்
சென்னை

மாநகராட்சி பெண் ஊழியா் கொலை கணவா் கைது

சென்னை அருகே நீலாங்கரையில், மாநகராட்சி ஊழியா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை

மாநகராட்சி பெண் ஊழியா் கொலை கணவா் கைது

சென்னை அருகே நீலாங்கரையில், மாநகராட்சி ஊழியா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை அருகே நீலாங்கரையில், மாநகராட்சி ஊழியா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.

நீலாங்கரை அருகே உள்ள சின்ன நீலாங்கரை மேட்டுகாலனியைச் சோ்ந்தவா் ச.ஹரி (35). இவா், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறாா். ஹரியின் மனைவி கோமதி (35). இவா், சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

ஹரிக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்ததினால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஹரிக்கும், கோமதிக்கும் இடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஹரி, கத்தியால் கோமதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் ஹரியை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →