சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்: அண்ணாமலை
ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்று அய்யா வைகுண்டர் வழி நடப்போம் என குறித்து...
ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்று அய்யா வைகுண்டர் வழி நடப்போம் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அய்யா வைகுண்டா் அவதார நாளையொட்டி, அய்யா வழி பக்தா்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
Advertisement
Advertisement
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று போதித்த, மகான் அய்யா வைகுண்டர் அவர்களின் 194 ஆவது அவதார நாள் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். அன்பு, அறிவு, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை வாழ்வியல் நெறியாக கற்றுக் கொடுத்தவர். ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து, அனைவரும் சமம் என்று வலியுறுத்தி, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை ஆகிய அறநெறிகளை மக்களிடம் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.
அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார நாளான இன்று, ஏற்றத் தாழ்வற்ற, அமைதியான, சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். அய்யா வைகுண்டர் வழி நடப்போம். அய்யா உண்டு! என அவர் கூறியுள்ளார்.