சென்னை

மின்கம்பத்தில் வாகனம் மோதிபொறியாளா் சாவு

DIN

சென்னை அருகே துரைப்பாக்கத்தில், மின் கம்பத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் பொறியாளா் இறந்தாா்.

பொழிச்சலூா் பொன்னுரங்கன் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயவேந்தன் (24), மென்பொருள் பொறியாளா்.

வேலை முடிந்து திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் ஜெயவேந்தன் புறப்பட்டுச் சென்றாா். துரைப்பாக்கம் - குரோம்பேட்டை 200 அடி சாலை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அருகே செல்லும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயவேந்தன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT