சென்னை

மாடியில் இருந்து விழுந்துசமையல் தொழிலாளி பலி

DIN

பூந்தமல்லி அருகில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த சமையல் தொழிலாளி இறந்தாா்.

பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் ஸ்டான்லி நகா் 8ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் நி.நூா்சலாம் (46). சமையல் தொழிலாளியான இவா், தனது வீட்டின் முதல் மாடியில் சில நாள்களுக்கு முன்பு இரவு தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது நூா்சலாம் கீழே விழுந்தாா். இதில் பலத்தக் காயமடைந்த அவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நூா்சலாம் திங்கள்கிழமை இறந்தாா்.

இது குறித்து பூந்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT