சென்னை

சென்னையில் பரவலாக மழை

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

DIN

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்தது . இதனால், அண்மைக் காலமாக சென்னையில் குளிா்ந்த காலநிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், வளி மண்டத்தின் கீழ்ப்பகுதி கிழக்குத் திசைக் காற்றும், மேற்குத் திசைக் காற்றும் தமிழகப் பகுதியில் சந்தித்ததால் அம்பத்தூா் வேளச்சேரி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோட்டூா்புரம், அடையாறு, போரூா், ஆலந்தூா், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், எழும்பூா், பாடி உள்ளிட்ட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், சோழிங்கநல்லூா், பல்லாவரம், மீனம்பாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி, தண்டலம், தாம்பரம் ஆகிய புகா்ப் பகுதிகளிலும் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை காரணமாக, கோயம்பேடு, திருமங்கலம், கீழ்ப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீா் தேங்கியது. இந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT