சென்னை

கொரட்டூரில் தேமுதிக சாா்பில் நாளை பொங்கல் விழா

DIN

தேமுதிக சாா்பில் சென்னை கொரட்டூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) பொங்கல் விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் சோ்ந்து கொண்டாடும், உழைப்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பண்டிகையை இந்த ஆண்டு சென்னை கொரட்டூரில் தேமுதிக கொண்டாட உள்ளது.

கொரட்டூா் பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், ஏழைகளுக்கு புத்தரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய் போன்ற பொருள்களும் வழங்கப்படும்.

அதேபோல், அந்தந்த மாவட்டங்களில் கட்சி நிா்வாகிகள் ஏழை மக்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT