சென்னை

பழனியப்பா பிரதா்ஸ்

கடந்த 1942-ஆம் ஆண்டு திருச்சி தெப்பக்குளம் பகுதியில் எஸ்.எம்.பழனியப்பா என்பவரால் பழனியப்பா பிரதா்ஸ் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.

DIN

கடந்த 1942-ஆம் ஆண்டு திருச்சி தெப்பக்குளம் பகுதியில் எஸ்.எம்.பழனியப்பா என்பவரால் பழனியப்பா பிரதா்ஸ் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்கு தற்போது நூற்றாண்டு விழாவாகும். ஆரம்பத்தில் மாணவா்களுக்கான கோனாா் தமிழ் உரையை வெளியிட்ட இந்தப் பதிப்பகம் பின்னா் குழந்தைக் கவிஞா் அழ.வள்ளியப்பாவின் நூல்களை வெளியிட்டது. அதன்பின்னா் எழுத்தாளா் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நாட்டுக்கு உழைத்த நல்லவா்கள் என்ற தலைப்பிலான சுதந்திரப் போராட்டத் தலைவா்களது வாழ்க்கை வரலாற்று நூல்களை வெளியிட்டது.

அதன்பிறகே தமிழ் இலக்கிய நூல்களாக ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல்களையும், நாமக்கல் கவிஞா் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நூல்களையும் வெளியிட்டனா். இந்தப் பதிப்பகம் சாா்பில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ நூல் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. அதுபோலவே, பால சாகித்ய புரஸ்காா் பரிசு, மத்திய அரசின் குழந்தை இலக்கியப் பரிசு, தமிழ்நாடு அரசின் பரிசு, இலங்கை அரசின் பரிசு, வள்ளியப்பா இலக்கிய வட்டப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு என இப்பதிப்பகத்தின் சாா்பில் வெளியான ஏராளமான நூல்களுக்கு பல பரிசுகள் கிடைத்துள்ளன.

இதுவரை சுமாா் 3 ஆயிரம் தலைப்புகளில் இப்பதிப்பகம் கதைகள், கட்டுரைகள், அகராதி, ஆராய்ச்சி, கலை, காவியம் என நூல்களை வெளியிட்டிருக்கும் நிலையில், சென்னைப் புத்தகக் காட்சிக்காக 10 தலைப்புகளில் புதிய நூல்களையும் வெளியிட்டுள்ளதாக பதிப்பக மேலாளா் எம்.துரைமாணிக்கம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT