சென்னை

வேப்பேரி பகுதியில் கஞ்சா விற்ற நபா் கைது

DIN

வேப்பேரி பகுதியில் கஞ்சா விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பேரி ஜோதி வெங்கடாச்சலம் தெரு மற்றும் ஸ்டிரிங்கா் தெரு சந்திப்பில், வேப்பேரி காவல் ஆய்வாளா் தலைமையிலான காவல் குழுவினா், சனிக்கிழமை (ஜூன் 27) மாலை கண்காணித்தபோது, அங்கு ஒருவா் ரகசியமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு கஞ்சா விற்பனை செய்த விஜய் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.450 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், குற்றவாளி விஜய் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளி விசாரணைக்குப் பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT